வெளிநாட்டவருக்கு வேலை! தடை செய்ய வலதுசாரிகள் தீவிரம்!

Must Read

படுதோல்வியடைந்த வலதுசாரி கட்சியினர் வேலைக்கு விண்ணப்பிக்கும் பிரான்ஸ் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கி, வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதை தடை செய்ய கோரிக்கை வைத்துள்ளது.


தமது திட்டத்தின் மையக் கொள்கையான “தேசிய முன்னுரிமை”யினை நடைமுறைக்கு கொண்டு வர, வலதுசாரி கட்சி, தனியார் துறையில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது குடியுரிமையை ஒரு தேர்வு அளவுகோலாக உள்ளடக்க வேண்டும் எனக் கோருகிறது.

கடந்த 40 ஆண்டுகளாக, பிரான்ஸ் குடிமக்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது வைத்தல், படுதோல்வியடைந்த கட்சி ராசம்பிள்மென் நேஷனல் (RN) இன் முக்கிய வாக்குறுதியாக இருந்து வருகின்றது.

1978 ஆம் ஆண்டில், முன்னாள் RN தலைவர் ஜான்-மாரி லெ பென், “ஒரு மில்லியன் வேலைவாய்ப்பின்றி இருப்பது, ஒரு மில்லியன் வெளிநாட்டவர்களை அதிகமாகவே காட்டுகிறது! பிரான்ஸ் மற்றும் பிரான்சுக்கே முன்னுரிமை!” என்று அறிவித்தார். அவரது மகள் மரினி பின்னர் கட்சியைப் பொறுப்பேற்றார், கட்சியின் பெயரையும் மாற்றினார், ஆனால் வேலைவாய்ப்பில் “தேசிய முன்னுரிமை” குறித்து கட்சியின் நிலைப்பாட்டை மாற்றாமல் வைத்திருக்கிறார்.

பணியமர்த்தலில் பாகுபாடு காட்டுவதே எப்போதும் ராசம்பிள்மென் நேஷனல் கட்சியின் முக்கிய வாக்குறுதி, ஆனால் இதுவரை இவ்வளவு வெளிப்படையாகக் கூறப்படவில்லை. செப்டம்பர் 14, சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட தங்களின் தொழில்துறை கொள்கையில், RN இதைக் குறிப்பதாக கூறுகிறது: “பதவி நிரப்ப வேண்டிய இடங்களில், சமமான திறமைகளுக்கு, அனைத்து நிலைகளிலும், தேசிய முன்னுரிமையை நடைமுறைக்க

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

Latest News

பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது சட்ட...
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More Articles Like This

- Advertisement -spot_img