Homeஊர் விடுப்பு

ஊர் விடுப்பு

spot_imgspot_img

காதலுக்காக கடலை தாண்டிய ஈழத்து பெண்

ராமேசுவரம் அருகே அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் அகதியாக வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடலோர பாதுகாப்பு போலீசார் உடனடியாக அரிச்சல்முனை கடற்கரைக்கு விரைந்து சென்று,...

இலங்கை செல்லும் பிரான்ஸ் தமிழர்கள் கவனம்! எச்சரிக்கை!

இலங்கை செல்லும் பிரான்ஸ் தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கை! இலங்கை முழுதும் வேகமாக பரவி வரும் இன்புளுவன்சா ரக நோயால் ஏற்கனவே சென்று இறங்கிய பலர்பாதிக்கப்பட்டுள்ளதக தெரிகிறது.வெறும் காய்ச்சலை தாண்டி கொடுமையான இருமல்,உடலை முறிக்கும்நோவு என 3-5 நாட்கள் உங்களை இருத்தி எழுப்பி போட்டுதான் விடும் என பாதிக்கப்பட்டவர்கள் தங்கள்கருத்துக்களை கூறியுள்ளனர். வரட்டு இருமல்,லேசான உடல் சூடு,சளி என்பனவே இதன் அறிகுறிகள் எனவும்,ஏர்போர்ட்,மக்கள் அதிகமாககூடும் இடங்களிலிருந்து உங்களுக்கு பரவும் என சொல்லப்படுகின்றது. இத்தகைய இடங்களில் கவனமாகஇருங்கள்..தவிர  ஆவி பிடித்தல்,மூலிகை தேநீர்,புளிகஞ்சி,முருங்கை இலை சூப் போன்ற இத்தகையநோய்களுக்கு எந்த பக்கவிளைவுகளமற்ற தீர்வுகளாகும். எனக்கு சரியாகும் என அடாத்தா ஊரில் திரிந்து அடுத்தவர்களுக்கு பரப்பி விட்ராதீர்கள்..அது கொடும்பாவம்..அறிகுறிகள் தென்பட்டால் உடனே மேல குறிப்பிட்ட இயற்கை தமிழ் முறை மருத்துவத்தை வீட்டிலேயேகையாளுங்கள்..சிறுவர்கள் என்றால் கொஞ்சம் கவனம் அதிகம் தேவை! 

யூடிப்பர் SK: ஆதரவாளர்கள் புதிய குற்றசாட்டு!

யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யூடியூபரின் வழக்கு இன்று (23.04.2025) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது விளக்கமறியல் திகதிகள் நிறைவுற்ற நிலையில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வழக்குநீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டு தொடர் விளக்கமறியலில்வைக்கப்பட்டார். இவ்வாறான சூழ்நிலையில் இன்றையதினம் (23) விளக்கமறியல் திகதி நிறைவுற்றதையடுத்து மல்லாகம்நீதிமன்றத்தில் அவரை முற்படுத்தியவேளை ஆள் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் கிருஷ்ண ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களிடையே மிகபெரும் மீம்யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.. கிருஸ்ணா குடும்பத்தை தவறான வார்த்தைகளால் திட்டும்எதிர்ப்பாளர்களுடன் கிருஸ்ணா ஆதரவாளர்கள் உக்கிரமான சமூக வலைத்தள சண்டை நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது..  ஒரு யூடிப்பர்,ஒரு அரசியல்வாதி,காட்டி கொடுத்த குடும்பத்தினர் என மூன்று எதிரிகளை குறிவைத்து மோசமாகவார்த்தை தாக்குதல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பணம் யாருக்கு! அனுரவின் சொன்னது நியாயமா..?

மக்களின் பணத்தை யார் கையாள வேண்டும்? ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கேள்வி: பொறுப்பு கோரலா அல்லது மறைமுகத் திட்டமா? கொழும்பு, ஏப்ரல் 20, 2025 – உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img