பரிஸில் அச்சம்: தப்பியோடிய சாரதி, 13 பேர் காயம்!

Must Read

சாரதி ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்து பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் 10 காவல்துறையினர் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மார்ச் 21 ஆம் திகதி இரவு இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Boulevard du Montparnasse மற்றும் Rue de Vaugirard வீதிகளுக்கிடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினரின் மகிழுந்துகள் நான்கு மகிழுந்து சாரதி ஒருவரை துரத்திச் சென்றுள்ளனர். இந்நிலையில், நான்கு மகிழுந்துகளும் விபத்துக்குள்ளானது.

இதில் 10 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். தப்பிச் சென்ற சாரதியும் பொதுமக்கள் இருவர் என மொத்தம் 13 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

மேலும், இந்த சம்பவம் பரிசின் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கு இதன் பின்னணி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

காவல்துறையினர் சாரதியை துரத்துவதற்கான காரணம் மற்றும் அவரது தொடர்புகளின் மீதான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சம்பவத்தின் போது சில கடைகளின் கண்ணாடிகள் உடைந்ததாகவும், இதனால் பொருள் சேதங்களும் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற சம்பவங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், காவல்துறையுடன் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் பரிஸின் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து கேள்விகளை உருவாக்கியுள்ளது.

பாதுகாப்பை வலுப்படுத்த காவல்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

Latest News

பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது சட்ட...
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More Articles Like This

- Advertisement -spot_img