பாரிசில் சிக்கிய நகை திருடன்,சொன்ன அதிர்ச்சி தகவல்கள்! காவல்துறை மயக்கம்!
பாரிசில் தொடர்ச்சியாக நகைகளை மட்டும் கொள்ளையடித்து வந்த திருடன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில் அவன் குற்றத்தை ஒத்துகொண்ட முறை பிரான்ஸ் காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தான் நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதற்கான காரணம் நகை போடுகிறவர்கள் காசுவைத்திருப்பார்கள்,தனது திருட்டால் அவர்கள் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படாது என கருதியதாகவும்,நகைமட்டும் திருடி சில முறைகளில் தேர்ச்சி பெற்றதாகவும் கூலாக கூறியிருக்கிறான்.
அத்துடன் நகைகளை விற்று வரும் பணத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருப்பதாக கூறிய அந்ததிருடன்,பணம் எல்லாவற்றையும் உடன் உடனயே செலவழித்துவிடுவேன் எனவும் கூறியுள்ளான்.
மேசம்: இன்று படத்துக்கு போவதால் தொழில்போட்டி குறையும்,பிள்ளைகள் லியோ பார்க்க ஆசைப்படுவதால்மனதில் சஞ்சலம் தோன்றும்.
ரிசபம் : வீட்டு பெண்களால் இன்று பணசெலவு உண்டாகும்,லியோ டிக்கெட் விலையை கேட்டுமயக்கமுறுவீர்கள்.
மிதுனம்: லியோ டிக்கெட் கிடைக்காத நண்பர்களால் சஞ்சலம் அடைவீர்கள்,லியோ க்ளைமாக்ஸ் நேரத்தில்வயிறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு
கடகம்: பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை இருப்பதால் லியோ படத்துக்கு அவர்களை கூட்டிசெல்லாமல் தனியாக செல்வீர்.
சிம்மம் : கவர்ச்சிகரமான ட்ரெயிலை நம்பி படம் பார்க்க வந்துவிட்டோம் என துயர் அடைவீர்.லியோ படம்நினைத்த மாதிரி இல்லாததால் மனசோர்வு அடைவீர்.
கன்னி: லியோவுக்கு கூட்டி செல்வதாக கொடுத்த வாக்கை உங்கள் நண்பர்கள் நிறைவேற்றாதால் ஏமாற்றம்அடைவீர்.கோபத்துக்குள்ளாகுவீர்.
துலாம்: சாதுரியமாக வேலையிடத்தில் பேசி லியோ செல்ல நேரத்தை ஒதுக்குவீர்.எதிர்பார்த்த உதவிகள்எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும்.
விருட்சிகம் : பிரச்சினைகளில் இருந்து விடுபட அஜித் ரசிகர்களை வம்பிழுப்பீர். உடல் பிரச்சினைக்காகமருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரிடலாம்.
தனுசு: மனைவி பிள்ளைகளுடன் லியோ பார்க்க வெளிகிடுவீர்.மெட்ரோ பயண தடங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள்உண்டு.
மகரம்: 500 ஆ 1000 கோடி லியோ வசூல் பிரச்சினையில் அஜித் ரசிகர்களாக இருக்கும் உங்கள்நண்பர்களுக்கே உமக்கு எதிராக திரும்புவதால் மனசங்கடம் உண்டாகும்.
கும்பம்: உங்கள் பேச்சாற்றலால் லியோவுக்கு நன்றாக உருட்டி முட்டு கொடுத்து தாங்குவீர்.இதன் மூலம் விஜய்ரசிகர்கள் மத்தியில் மிகுந்த புகழடைவீர்.
மீனம்: லியோ பற்றி மற்றவர்களின் தப்பான விமர்சனத்தால் வேதனைபடுவீர்கள்,தியேட்டர் பயணங்களால்அலைச்சல் உண்டாகும்.செலவு அதிகரிக்கும்.
பாரிஸ் கலவரங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளையோர்கள் முழுமையாகவிடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.பெற்றோர் சந்திப்புகளின் பின்னர்,சில எச்சரிக்கைகளுடன் கூடியவகையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே எந்தவொரு வழக்குகளும் இல்லாத நிலையிலும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டும்எதிர்காலங்களில் சிக்கினால் என்ன நடக்கும் என்ற தீவிரமான எச்சரிக்கைகளுக்கும் பின்னரே வழக்கில்இருந்து பெற்றோர் சகிதம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாரிஸ் வாசியான தமிழர் கருத்து தெரிவிக்கையில் வசிக்க வந்த இடங்களில் பெயரைகெடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலிதனம்,என்ன குழப்படி விடுறது என்றாலும் ஊருக்கு போய் விட்டுகொள்ளுங்கள்,இங்கே இருந்து அடுத்தவர்கள் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள், அவனவன் 1000 பிரச்சினைகளுடன் கவலைகளுடன் வாழ்க்கையை கொண்டு செல்கிறான் என குறிப்பிட்டார்.
பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் ஏஜென்சிகள் மாதம் பல கோடிகளை உழைத்து தள்ளுவதாக சிலநம்பிக்கையான வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இவர்கள் இலங்கை இந்தியா மலேசியா பங்களாதேஷ் என்று கிழக்கு நாடுகள் பலவற்றை குறிவைத்து இயங்கிவருவதாகவும் சொல்லப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் அதிகளவாக இந்திய தமிழர்கள் இவர்கள் ஊடாக பிரான்ஸ் வரஆரம்பித்துள்ளனர்.ஈழதமிழர்களோடு ஒப்பிடும் போது இந்திய தமிழர்களுக்கு காசின் பெறுமதி அதிகம்என்பதால்,அவர்களால் ஏஜென்சி கேட்கும் தொகையை இலகுவாக கொடுக்க கூடியதாக உள்ளதாகசொல்லப்படுகின்றது.
உதாரணமாக இலங்கை காசு ஒரு கோடி என்றால்,இந்தியாவில் அது வெறும் 25-30 லட்சம்தான்.. இந்திய எட்டுகோடி தமிழர்களில் வாழ வழியில்லாமல் பரம்பரை சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு இதெல்லாம் சின்னஒரு காசு!
பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாபே தனது சொந்த ஊரான கேமரூனுக்கு சென்றிருந்தார்.. இது தொடர்பான காணொளி! இந்த கேமரூன்... மொழி தமிழருக்கு மிக நெருங்கிய ஒரு மொழியாகும்... கேமரூன்கள் பேசுவது அச்சு...
பிரான்ஸ் அதன் காவல்துறைக்குள் காணப்படும் இனவெறி மற்றும் இனப்பாகுபாடு குறித்துத் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
பாரிஸில் பதின்ம வயது இளைஞர் ஒருவர் பொலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருக்கின்ற ஐ....
தனது திறமையால் நியூயோர்க் மக்களை திரும்பி பார்க்க வைத்த யாழ்ப்பாண தமிழர்!
18 ஆண்டுகளாக நியூயோர்க் நகர மக்களின் கவனத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ஈர்த்துள்ளார்.நியூயோர்க்கில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரின் தோசைக்கடை அந்நாட்டு...